விளையாட்டு

தங்கம் வென்ற சதீஷ்க்கு ரூ50 லட்சம் பரிசு: முதல்வர் அறிவிப்பு

webteam

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற  சதீஷ்குமார் சிவலிங்கத்துக்கு ரூ.50 லட்சம் பரிசுத்தொகையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் தங்கம் வென்று தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

21வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைப்பெற்று வருகிறது.இதில் 70க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 4500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் இன்று நடைப்பெற்ற ஆண்களுக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் சதிஷ் குமார் சிவலிங்கம் 77கிலோ எடைப்பிரிவில் பங்கேற்றார். இவர் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இந்தப்போட்டியில் இவர் தங்கம் வென்றார்.தங்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்த சதீஷ்குமார் சிவலிங்கத்துக்கு ரூபாய் 50 லட்சம் பரிசுத்தொகையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.தமிழக அரசின் சார்பாக இந்த பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.