விளையாட்டு

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி: இந்த 6 பேரிடம்தான் நேர்காணல்!

webteam

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு வந்த 2 ஆயிரம் விண்ணப்பங்களில் இருந்து 6 பேர் கொண்ட இறுதிப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சி யாளர் பரத் அருண், பேட்டிங் பயிற்சி யாளர் சஞ்சய் பாங்கர், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரின் பதவி காலம் உலகக் கோப்பை தொடருடன் முடிவடைந்தது. இதனையடுத்து புதிய பயிற்சியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் கடந்த 30ஆம் தேதியுடன் முடிந்தது.

தலைமை பயிற்சியாளர் தேர்வு வரும் 16 ஆம் தேதி நடக்கிறது. பயிற்சியாளரை தேர்வு செய்ய கபில்தேவ் தலைமையில் அன்ஷூமன் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி நீடிக்க வேண்டும் என்று கேப்டன் விராத் கோலி விருப்பம் தெரிவித்துள்ளார். 

‘பயிற்சியாளர் தேர்வில் கேப்டன் விராத் கோலி உள்பட ஒவ்வொருவரின் கருத்துக்கும் மதிப்பளிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார் கபில்தேவ்.

இந்நிலையில், இந்த பதவிக்கு 2000 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் இருந்து , ஆஸ்திரேலியாவின் டாம் மூடி, நியூசி லாந்து முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெஸன், தென்னாப்பிரிக்காவின் கேரி கிர்ஸ்டன், இலங்கையின் ஜெயவர்த்தனே, இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ராபின் சிங், லால்சந்த் ராஜ்புத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் நேர்காணல் நடத்தப்படும். இதில் இருந்து ஒருவர் தேர்வு செய்யப்பட இருக்கிறார்.