விளையாட்டு

பார்வைத்திறன் குன்றியோருக்கான உல‌க்கோப்பை கிரிக்கெட்: இந்தியா சாம்பியன்

webteam

பார்வைத்திறன் குன்றியோருக்கான உல‌க்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 

சார்ஜாவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 40 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்தது. பின்னர் 309 ரன்கள் ‌என்ற வெற்றி இலக்கை இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 39.2 ஓவர்களில் எட்டியது. இதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை வென்று இந்திய அணி அசத்தியது.

பார்வைத்திறன் குன்றியோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வெற்றி தேசத்தை பெருமையடையச் செய்துள்ளதாகவும், ஒவ்வொரு இந்தியனுக்கும் தனித்தெம்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உண்மையான வீரர்கள் என்றும் சாம்பியன் பட்டம் வென்ற வீரர்களை பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளார்.