விளையாட்டு

இந்திய டீம்ல இனி எனக்கு வாய்ப்பில்லை: பத்ரிநாத் பக்குவம்

இந்திய டீம்ல இனி எனக்கு வாய்ப்பில்லை: பத்ரிநாத் பக்குவம்

webteam

இந்திய கிரிக்கெட் அணியில் எனக்கு இனி வாய்ப்பு கிடைக்காது என்பது தெரியும் என்று தமிழக வீரர் பத்ரிநாத் கூறினார். 

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் காரைக்குடி காளைஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார் பத்ரிநாத். அவர் கூறும்போது, ‘வர இருக்கிற முதல் தர கிரிக்கெட் போட்டியில் நான் விளையாடவில்லை. அதற்காக ஓய்வுப் பெற போகிறேன் என்று அர்த்தமல்ல. எனக்கு வேறு சில வாய்ப்புகளும் வந்திருக்கிறது. ஆனால் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் விளையாடுகிறேன். மற்ற வாய்ப்புகள் குறித்து பிறகு முடிவு செய்வேன். இந்திய கிரிக்கெட் அணியில் இனி எனக்கு வாய்ப்புக் கிடைக்காது என்பது தெரியும். இதையெல்லாம் மனதில் வைத்தே எனது அடுத்த கட்ட நகர்வு இருக்கும்’ என்ற பத்ரிநாத், இந்திய கிரிக்கெட் அணிக்காக 2 டெஸ்ட், 7 ஒரு நாள் போட்டி, ஒரு டி20 போட்டிகளில் விளையாடியிருக்கிறார்.
145 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 10 ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். இதில் 32 சதங்கள் அடங்கும்.