விளையாட்டு

ஒலிம்பிக் குத்துச்சண்டை: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அமித் பங்கல் தோல்வி

jagadeesh

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் 52 கிலோ பிரிவு குத்துச்சண்டையில் இந்தியாவின் அமித் பங்கல் தோல்வியடைந்தார்.

ஒலிம்பிக்கில் ஆடவர் 52 கிலோ எடை பிரிவுக்கான குத்துச்சண்டையில் காலிறுதிக்கு முந்தையச் சுற்றுப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் அமித் பங்கல் - கொலம்பியாவின் மார்டினஸ் மோதினர்.இதில் அமித் பங்கலை 4-1 என்ற புள்ளிகள் கணக்கில் மார்டினஸ் வென்றார்.

கடந்த ரியோ ஒலிம்பிக்கில் மார்டினஸ் வெள்ளிப் பதக்கம் வென்றர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தோல்வியை அடுத்து அமித் பங்கலின் தற்போதைய ஒலிம்பிக் பதக்க கனவு முடிவுக்கு வந்தது.