சர்ச்சைக்கு உள்ளான கோல் pt web
விளையாட்டு

“இந்திய கால்பந்து அணியின் கனவையே சிதைத்துவிட்டது” - பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் வேதனை

PT WEB

2026ஆம் ஆண்டு நடைபெற உலகக்கோப்பை கால்பந்து தொடரில் விளையாடுவதற்காக பல்வேறு நாட்டு அணிகளுக்கு இடையே தகுதிச்சுற்றுப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் கத்தாருடன் இந்தியா நேற்று விளையாடியது. இந்திய அணி ஒரு கோல் போட்டு முன்னிலை பெற்றாலும் கத்தார் அடுத்து 2 கோல்களை போட்டு வெற்றிபெற்றது. ஆனால் கத்தாரின் 2ஆவது கோல் விதிமுறைகளுக்கு மாறாக இருந்தது தெளிவாக தெரிந்தது.

கத்தார் வீரர் கோல் போட்டதாக நடுவர் கூறியதால் ஆட்டத்தில் இந்தியா தோற்க நேர்ந்தது. இந்த கோல் அளிக்கப்பட்டிருக்காவிட்டால் போட்டி சமனில் முடிந்து இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேறும் நிலை இருந்தது. மேலும் முதல்முறையாக 3ஆம் தகுதிச்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் இந்தியா இழந்தது.

இந்நிலையில் தென் கொரிய நடுவர் அளித்த தவறான முடிவு குறித்து விரிவாக விசாரிக்க கோரி போட்டி ஆணையரிடம் இந்தியா முறையிட்டுள்ளது. தவறான ஒரு முடிவு இந்திய கால்பந்து அணியின் கனவையே சிதைத்துவிட்டதாக பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் வேதனை தெரிவித்துள்ளார்.