விளையாட்டு

என்னா ஓட்டம் இது! 102 வயதில் தடகளப் போட்டியில் சாதித்த தாய்லாந்து நபர்

Sinekadhara

தாய்லாந்தைச் சேர்ந்த 102 வயதான நபர், தடகளப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார்.

தாய்லாந்தில் முதியவர்களுக்கான தடகளப் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான முதியவர்கள் கலந்து கொண்டனர். 102 வயதான SAWANG என்பவர், நூறு மீட்டர் ஓட்டப் பந்தயப் போட்டியில் கலந்துகொண்டு, தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது அனைவரையும் வியக்கவைத்தது. போட்டியில் பங்கேற்பதற்காக தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்ததாகவும், விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதன் மூலம், தனது உடல் மேலும் வலிமையடைவதாகவும் SAWANG தெரிவித்துள்ளார்.

மேலும் சத்தான உணவுகளை உட்கொண்டு, நேர்மறையான எண்ணங்களுடன் வாழ்ந்தால் எதையும் சாதிக்கலாம் என அனைவரையும் உற்சாகமூட்டும் வகையில் SAWANG கூறியுள்ளார்.