ரஷ்யா - உக்ரைன்

”உளவு அலுவலகங்களுக்கு அருகே உள்ளவர்கள் உடனே வெளியேறுங்கள்” - ரஷ்யா எச்சரிக்கை

Veeramani

உக்ரைனில் உளவு அலுவலகங்களுக்கு அருகே உள்ளவர்கள் உடனே வெளியேறுங்கள் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக ரஷ்ய ராணுவம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள உளவு அலுவலகங்களுக்கு அருகே உள்ளவர்கள் உடனடியாக வெளியேறுங்கள் நாங்கள் அங்கே தாக்குதல் நடத்தப் போகிறோம்" என தெரிவித்துள்ளது

நேற்று பெலாரஸ் நாட்டில் ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த சூழலில் 5 வைத்து நாளாக உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதலை தொடர்ந்து வருகிறது.