இந்தியா

மனித தலையை சுட்டு சாப்பிட்ட சைக்கோ இளைஞர் கைது !

jagadeesh

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மனித தலையை சுட்டு சாப்பிட்ட சைக்கோ இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

விசாகப்பட்டினம் மாவட்டம், ரெல்லி வீதியில், ஒதுக்குப்புறத்தில் பாழடைந்த வீடு ஒன்று உள்ளது. இந்த வழியாக யாரும் சென்றதில்லை. இந்நிலையில், நேற்று காலை அவ்வீட்டின் ஜன்னல் வழியாக புகை வந்தது. சாலையில் நடமாடி கொண்டிருந்தவர்கள் இதை கண்டனர். அங்கு சென்று பார்த்தபோது, அங்கு ஒருவர், மனித தலையை தீயில் சுட்டு தின்று கொண்டிருந்தார். ஊர்மக்களை பார்த்தவுடன், அவர் தப்பியோடினார்.

இதையடுத்து, ஊர்மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு விரைந்த போலீசார், இது குறித்து விசாரணை நடத்தினர்.அதில், தப்பி ஓடியவர், ராவேல பூடி ராஜு, 20, என்றும், அவர் மனநலம் பாதித்தவர் என்றும் தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வந்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மனித தலை இடுகாட்டிலிருந்து எடுத்து வரப்பட்டதா அல்லது வேறு ஏதாவது சம்பவம் நிகழ்ந்துள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர்.

இதனையடுத்து அந்த சைக்கோ இளைஞரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் விசாகப்பட்டினம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.