இந்தியா

இளம் விஞ்ஞானி திட்ட பயிற்சி முகாம் ஒத்திவைப்பு - இஸ்ரோ

webteam

(கோப்பு புகைப்படம்)

அடுத்த மாதம் நடைபெறவிருந்த பள்ளி மாணவர்களுக்கான இளம் விஞ்ஞானி திட்ட பயிற்சி முகாம் ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது

பள்ளி மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக இஸ்ரோ, இளம் விஞ்ஞானி திட்டத்தை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.
இதற்காக நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் 3 பேர் தேர்வு செய்யப்பட்டு இஸ்ரோவின் 4 மையங்களிலும் அடுத்த மாதம் 11ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை முகாம் நடைபெறுவதாக இருந்தது.

இதற்காக ஒன்றரை லட்சம் பள்ளி மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கான இளம் விஞ்ஞானி திட்ட பயிற்சி முகாம் ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.