இந்தியா

”எம்.பி பணிகளை தொடர்வேன்.. ஆனால்” - முடிவை மாற்றிக்கொண்ட பாஜக எம்பி பபுல் சுப்ரியோ

Veeramani

மத்திய அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டதால் அதிருப்தியில் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த எம்.பி பபுல் சுப்ரியோ தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளார்.

பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு எம்பியாக தனது கடமையை தொடரவிருப்பதாக கூறினார். அதே நேரம் அரசியலில் இருந்து விலகுவது மற்றும் டெல்லியில் தனது அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவது ஆகிய முடிவுகளில் மாற்றமில்லை என அவர் குறிப்பிட்டார். சமீபத்தில் தாம் தெரிவித்த கருத்துகள் அனைத்தும் கட்சியின் நலனை கருத்தில் கொண்டு தெரிவித்தது என்றும் அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் பபுல் சுப்ரியோ கூறியுள்ளார்.