இந்தியா

பாபர் மசூதி வழக்கில் விடுவிக்கப்படுவாரா அத்வானி? :இன்று தீர்ப்பு

webteam

பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பை வழங்க இருக்கிறது.

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகளை கைவிடுவதை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்க உள்ளது. பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் ரேபரலி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். அலகாபாத் உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை உறுதி செய்த நிலையில் விடுவிப்பை எதிர்த்து சிபிஐ உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது.