உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கோப்புப்படம்
இந்தியா

சந்திரசூட் முன்மொழிந்த உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார்? வெளியான தகவல்!

PT WEB

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை, சந்திரசூட் முன்மொழிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட், அடுத்த மாதம் 10 ஆம் தேதியோடு ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து விதிகளின்படி, அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிப்பது என மத்திய அரசு, சந்திரசூட்டின் பரிந்துரையை கோரியதாக கூறப்படுகிறது. அதன்படி சந்திரசூட்,

சஞ்சீவ் கண்ணாவின் பெயரை பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதைய உச்சநீதிமன்ற நீதிபதிகளில், சந்திரசூட்டிற்கு பிறகு சஞ்சீவ் கண்ணாவே மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சஞ்சீவ் கண்ணா 2019 ஆம் ஆண்டு, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

அவரை விட வயது மற்றும் அனுபவத்தில் மூத்த 33 நீதிபதிகளை தாண்டி, சஞ்சீவ் கண்ணாவே உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டது அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.