இந்தியா

’’எனக்கு காசு கொடு.. இல்லாவிட்டால்.!’’- இணையத்தில் வைரலாகும் டீனேஜ் சிறுவனின் அட்ராசிட்டி!

’’எனக்கு காசு கொடு.. இல்லாவிட்டால்.!’’- இணையத்தில் வைரலாகும் டீனேஜ் சிறுவனின் அட்ராசிட்டி!

Sinekadhara

கேரளாவைச் சேர்ந்த சிறுவன் தனது குடும்பத்தாரிடம் பணம் கேட்டு தகராறு செய்து, தாக்கும் வீடியோ இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது.

இந்த சண்டையை பார்வையாளர் ஒருவர் வீடியோவாக பதிவிட்டுள்ளார். அதில், சிறுவன் ஆக்ரோஷமாக கத்தி, வீட்டின் ஜன்னலை வேகமாக அடிக்கிறான். மேலும் எனக்கு இப்போதே பணம் வேண்டும் என்று அடாவடியாக கேட்டுக்கொண்டே, வராண்டாவில் அமர்ந்திருந்த வயதான பெண் ஒரிவரை உதைத்து தாக்குகிறான். மேலும் தாயார் போல் தெரிகிற மற்றொரு பெண் மீது செருப்பை எடுத்து வேகமாக வீசுகிறான்.

வீட்டிற்குள் செல்வதும் வெளியே வருவதுமாக கட்டுப்பாடின்றி காணப்படும் அந்த சிறுவன் கோபத்தில் தன்னை சுற்றியுள்ள அனைவரையும் மோசமாக திட்டுகிறான். அவனுடைய ஒரே தேவை அந்த நேரம் பணம் மட்டும்தான் என்பதை பார்ப்பவர்களால் புரிந்துகொள்ள முடிகிறது. ’’“ஒன்னும் சொல்லாதீங்க, அவங்க என்ன வேணும்னாலும் செய்யட்டும்...எல்லாருக்கும் இதை முழுசா காட்டணும்னு முடிவு பண்ணிட்டேன்’’ என்கிற குரல் கேமிரா பின்னாலிருந்து கேட்கிறது.

இந்த வீடியோ கடந்த ஜூலை மாதமே இணையங்களில் பரவி பொதுமக்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. மீண்டும் சனிக்கிழமை ஒரு ட்விட்டர் பயனர் இந்த வீடியோ பகிர்ந்ததை அடுத்து மீண்டும் வைரலாகி வருகிறது. கேரளாவில் அதிகரித்து வரும் போதைப்பொருள் தாக்கம்தான் சிறுவனின் இந்த நடத்தைக்கு காரணம் என பலரும் அந்த வீடியோவிற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர். சிறுவனின் இந்த நடத்தையை பார்த்து அதிர்ந்த நெட்டிசன்கள் பலரும் அவன்மீது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.