இந்தியா

கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதலில் வீரமரணம் அடைந்த பழனிக்கு வீர் சக்ரா விருது

webteam

கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதலில் வீர மரணம் அடைந்த ஹவில்தார் பழனிக்கு வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜுன் மாதம் கல்வான் எல்லைப்பகுதியில் இந்திய சீன வீரர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் மூத்த ராணவ அதிகாரி ஒருவரும் இரண்டு ராணுவ வீரர்களும் வீரமரணம் அடைந்தனர். இதில் தமிழகத்தை சேர்ந்த  பழனியும் ஒருவர். இவர் இராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்தவர். இவருக்கு மத்திய அரசு சார்பில் வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.