இந்தியா

கூகுள் சி.இ.ஓ சுந்தர்பிச்சை மீது அவசர கதியில் உ.பி போலீசார் வழக்கு: பின்னர் நீக்கம்

கூகுள் சி.இ.ஓ சுந்தர்பிச்சை மீது அவசர கதியில் உ.பி போலீசார் வழக்கு: பின்னர் நீக்கம்

Veeramani

கூகுள் சி.இ.ஓ சுந்தர்பிச்சை மீது அவசர கதியில் வழக்கு பதிவு செய்த உ.பி போலீசார், பின்னர் நீக்கம் செய்தது பரபரப்பை உருவாக்கியது.

பிரதமர் மோடி குறித்து அவதூறாக வெளியான வீடியோ தொடர்பாக கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை மீது அவசர கதியில் வழக்கு பதிவு செய்தது உத்தர பிரதேச மாநில போலீஸ். பின்னர் அந்த வழக்கிற்கும் சுந்தர் பிச்சை உள்பட 4 கூகுள் நிர்வாகிகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதால் அவர்களது பெயர்கள் நீக்கப்பட்டது என தகவல்.