இந்தியா

பாலியல் தொல்லையில் இருந்து காப்பாற்ற பிரதமருக்கு கடிதம் எழுதிய மாணவி

webteam

பாலியல் தொல்லையிலிருந்து தன்னைக் காப்பாற்ற வேண்டி உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில், பாலியல் தொல்லைக்கு ஆளானதாகக் கூறப்படும் கல்லூரி மாணவி, தனக்கு நீதி வேண்டி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். முசாபர் நகர் பகுதியைச் சேர்ந்த அந்த மாணவி, தன்னை இளைஞர் ஒருவர் கடந்த ஒரு வருடமாக பின்தொடர்வதாகவும், அவ்வப்போது தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பி்ட்டுள்ளார். அந்த இளைஞர் தனக்கு கொலை மிரட்டல் வேறு விடுப்பதால், தன்னால் வீட்டை விட்டு வெளியில் செல்வது கூட மிகவும் கடினமாகவிட்டதாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி கூறியுள்ளார்.