மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அமித்ஷா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா தொற்றுக்கு சாமானிய மக்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முன்களப் பணியாளர்களும் கூட கொரோனா தொற்றுக்கு உள்ளாகுகின்றனர். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் விரைவில் கொரோனா பரிசோதனை செய்துகொள்வார்கள் என தெரிகிறது.