இந்தியா

விஜய் மல்லையாவை இந்தியா அழைத்துவர வாய்ப்பு?

விஜய் மல்லையாவை இந்தியா அழைத்துவர வாய்ப்பு?

webteam

வங்கிக் கடன் மோசடியில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள விஜய் மல்லையா இன்னும் சில நாட்களில் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்த விஜய் மல்லையா, பிரிட்டனில் தஞ்சமடைந்தார். அவரை நாடு கடத்தக்கோரி இந்திய அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து, பிரிட்டன் நீதிமன்றம் அதற்கு அனுமதியளித்திருந்தது. இருப்பினும், மல்லையா தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்தக் கூடாது என லண்டன் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெறுகிறது. 

இந்நிலையில், விஜய் மல்லையாவுக்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும்பட்சத்தில், அவர் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. இருப்பினும் இதுபோன்‌ற வழக்குகளை அந்‌நாட்டு உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளாது எனக் கூறப்படுகிறது. அப்படி ஏற்றுகொள்ளாதபட்சத்தில், விஜய் மல்லையா 28 நாட்களுக்குள் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார் என ‌எதிர்பார்க்கப்படுகிறது.