விபத்து நடந்த பாலம் pt web
இந்தியா

ஆந்திரா | மேம்பால பக்கவாட்டு சுவரில் மோதி மேலிருந்து கீழ் விழுந்த இளைஞர்கள்; இருவர் உயிரிழப்பு

PT WEB

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தின் விமானநிலையத்திற்கு அருகே மேம்பாலம் ஒன்று உள்ளது. அதில் மூன்று இளைஞர்கள் ஒரே வாகனத்தில் வேகமாக சென்றுள்ளனர். அப்போது பக்கவாட்டு சுவரின் மீது, அவர்கள் வந்த டியூக் வாகனம் மோதியதில், அதில் பயணித்த இருவர் பாலத்தின் கீழ் விழுந்தனர்.

விபத்து நடந்த பாலம்

ஏர்போர்ட் போலீசார் சார்பில் வெளியிடப்பட்ட சிசிடிவி காட்சிகளில், இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிவேகமாக வந்து பக்கவாட்டுச் சுவரில் மோதியதுதான் உயிரிழப்பிற்கு காரணம் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.