இந்தியா

இரண்டு வயது சிறுமியை வன்கொடுமை செய்ய முயன்ற இருவர் தப்பியோட்டம்: போலீஸ் விசாரணை

EllusamyKarthik

மத்திய பிரதேச மாநிலம் ஜபால்பூரில் இரண்டு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற இருவரை போலீஸ் தேடி வருகிறது. 

வீட்டில் தனியாக இருந்த அந்த சிறுமியை அடையாளம் தெரியாத இருவர் வன்கொடுமை செய்ய முயன்றபோது சிறுமியின் அழுகுரல் கேட்டு எதேச்சையாக அந்த சிறுமியின் தாய் வீட்டுக்குள் வந்ததும் அந்த இருவரும் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளனர். 

முதற்கட்டமாக சிறுமியின் தாயாரிடம் மேற்கொண்ட விசாரணையை அடிப்படையாக கொண்டு குற்றவாளிகளை தேடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.