இந்தியா

பாலியல் வன்கொடுமை செய்து நிர்வாண ஊர்வலம்: பழங்குடி பெண்ணுக்கு கொடுமை!

webteam

பாலியல் வன்கொடுமை செய்து பழங்குடியின பெண்ணை நிர்வாணமாக இழுத்துச் சென்றவர் கைது செய்யப்பட்டார்.

மத்தியபிரதேச மாநிலம் சிதி மாவட்டத்தைச் சேர்ந்தவர், 30 வயது பழங்குடியினப் பெண். இவர் கணவர் பத்து வருடத்துக்கு முன் இறந்துவிட்டார். இதனால் தனியாக வசித்து வந்தார். இவர் கடந்த 22 ஆம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர் வீட்டுக்குள் நுழைந்த பக்கத்து வீட்டுக்காரர், பாலியல் வன்கொடுமை செய்தார். பின்னர் அவரை நிர்வாணமாக வெளியே இழுத்து வந்து, ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளார். இதையறிந்த, அந்த பக்கத்து வீட்டுக்காரரின் பெற்றோர்கள் அந்தப் பெண்ணை மீட்டு உடை கொடுத்துள்ளனர்.

நடந்த சம்பவத்தை தனது உறவினர்களிடம் மறுநாள் தெரிவித்துள்ளார் பாதிக்கப்பட்ட அந்தப் பெண். அவர்கள் போலீசாரிடம் புகார் செய்தனர். இதையடுத்து அவர்கள், அவரை கைது செய்து விசாரித்தனர். தனக்கு பில்லி சூனியம் வைத்ததாக சந்தேகம் இருந்ததால், அப்படி செய்தேன் என்று பக்கத்து வீட்டுக்காரர் தெரிவித்துள்ளார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.