இந்தியா

ரயில் டிக்கெட் முன் பதிவுக்கு ஆதார் கட்டாயம்

webteam

ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய விரைவில் ஆதார் எண் கட்டாயமாக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா முழுவதும் விடுமுறை மற்றும் பண்டிகைக் காலங்களில் முறைகேடாக, ரயில்களில் முன்பதிவு செய்து டிக்கெட்டுகள் விற்கப்படுவதை தடுக்க ஆதார் எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு வெளியிட்டுள்ள 2017 - 2018ம் ஆண்டுக்கான ரயில் திட்டத்தில், ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்ட டிக்கெட் பதிவு திட்டம், ரயில் நிலையங்களில் மின்னனு பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் விதமாக, ஸ்வைப் இயந்திரங்களின் பயன்பாட்டை அதிகரிப்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.