காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

காலை தலைப்புச் செய்திகள்|ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் To மாலை வெளியாகும் 'தளபதி 69' அப்டேட்!

PT WEB
  • அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.இதில், 17 முன்னணி நிறுவனங்களுடன் 7, 516 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

  • தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்குவதற்கு முன்வந்த ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனம். இந்நிலையில், பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிக்கை.

  • தமிழ்நாடு முழுவதும் 2,763 மையங்களில் இன்று நடைபெறுகிறது குரூப்-2 தேர்வு.இத்தேர்வில், 2, 327 காலிப்பணியிடங்களுக்கு சுமார் 7 லட்சத்து 94 ஆயிரம் பேர் போட்டி.

  • தமிழக அரசுக்கு பல நிறுவனங்கள் கோடிக்கணக்கில் குத்தகை பாக்கி வைத்துள்ளது புதிய தலைமுறை கள ஆய்வில் அம்பலம். அதிகபட்சமாக சென்னையில் 1,382 கோடி ரூபாய் குத்தகை நிலுவைத் தொகை உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

  • ஈரோடு அருகே துணை மின் நிலையம் அமைக்கும் பணிகளுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கோயில் நிலத்தை விட்டுவிட்டு வேறு இடத்தில் கட்டுமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

  • ஜம்மு காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு வீரர்கள் வீரமரணம். சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளதால், எல்லையோர பகுதிகளில் ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

  • சிறையில் இருந்து வெளியே வந்த டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு ஆம் ஆத்மி கட்சியினர் உற்சாக வரவேற்பு. அப்போது, நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிரான தனது போராட்டம் தொடரும் என பேசியுள்ளார்.

  • டெல்லியில் கனமழையால் முக்கிய சாலைகளில் முழங்கால் அளவுக்கு தேங்கிய தண்ணீரால், பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல்.இதனால்,வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

  • சிங்கப்பூரில் LED விளக்குகளால் அமைக்கப்பட்ட 2 கோடி விளக்குகளால் ஆன காட்சிகளை கண்டு வியந்த பார்வையாளர்கள்.

  • தெற்காசிய ஜூனியர் தடகள போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா. 21 தங்கம், 22 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 48 பதக்கங்களை குவித்து அபாரம்.

  • இன்று மாலை வெளியாகிறது 'தளபதி 69' படத்தின் அட்டகாசமான அப்டேட்.விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் உச்சபட்ச எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.