இன்றைய காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

காலை தலைப்புச் செய்திகள்|நாட்டைவிட்டு வெளியேறிய வங்கதேச பிரதமர் To பதக்கவாய்ப்பை இழந்த லக் ஷயா சென்!

PT WEB
  • வங்கதேசத்தில் வெடித்த வன்முறையால் பிரதமர் பதவியிலிருந்து விலகி, நாட்டிலிருந்து வெளியேறினார் ஷேக் ஹஸீனா.

  • வங்கதேச நாடாளுமன்றம், பிரதமர் இல்லத்தை கைப்பற்றி சூறையாடிய போராட்டக்காரர்கள், முன்னாள் அதிபர் ஹிஜிபூர் ரகுமானின் உருவசிலையை சேதப்படுத்தினர்.

  • வங்கதேசத்தில் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு விரைவில் இடைக்கால அரசு அமைக்கப்படும் என அந்நாட்டு அதிபர் முகமது ஷஹாபுதீன் அறிவித்துள்ளார்.

  • பிரதமர் மோடி இல்லத்தில் கூடியது பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு . வங்கதேச அரசியல் விவகாரம் குறித்து முக்கிய அமைச்சர்கள் ஆலோசனை செய்யவுள்ளனர்.

  • உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவியா? என்ற கேள்விக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூசக பதில்.

  • தூத்துக்குடி மீனவர்கள் 22 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர், எல்லைத்தாண்டிய குற்றச்சாட்டில் பலரை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.இதனால், மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

  • தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதை தடுக்க விரைவில் நடவடிக்கை என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்.

  • பாரீஸ் ஒலிம்பிக்கில் மூன்றாயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் அவினாஷ் சேபிள் இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம் .டேபிள் டென்னிஸ் மகளிர் அணி காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

  • மல்யுத்தம் அரையுறுதி போட்டியில் விரல் உடைந்த நிலையிலும் போராடிய இந்திய வீராங்கனையின் கையில் ஏற்பட்ட விபத்தால், பதக்க வாய்ப்பு பறிபோனதால் கண்ணீர்.

  • பாரிஸ் ஒலிம்பிக்கில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லக் ஷயா சென் வெண்கலத்திற்கான போட்டியில் ஏமாற்றம். இந்தவகையில், முழங்கை காயத்துடன் கடைசி வரை போராடி வெற்றி வாய்ப்பை இழந்தார்.