இன்றைய காலை தலைப்புச்செய்திகள் Facebook
இந்தியா

78-ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் - 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

PT WEB
  • நாடு முழுவதும் 78-ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் நரேந்திரமோடி.

  • சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார்.

  • வயநாடு நிலச்சரிவில் உயிரையும் பொருட்படுத்தாமல் துணிச்சலாக செயல்பட்டதற்கு பாராட்டு தெரிவித்து, செவிலியர் சபீனாவுக்கு வீர, தீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்குகிறது தமிழக அரசு.

  • சுதந்திரதின கொண்டாட்டத்தை முன்னிட்டு மின்னொளியில் ஜொலிக்கும் பாரம்பரிய சின்னங்கள். நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கும் வண்ண விளக்குகளால் அலங்காரம்.

  • பிரதமர் மோடி தலைமையிலான அரசு சமூக நீதிக்கே அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது என சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை.

  • பாரிஸ் ஒலிம்பிக்கில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகட்டின் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. வெள்ளிப்பதக்க கோரிக்கையை நிராகரித்தது சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம்.

  • கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு மேற்குவங்கம் முழுவதும் வெடித்த போராட்டம். மருத்துவமனை முன்பு போராடியவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதால் பதற்றம்.

  • பயிற்சி மருத்துவர் படுகொலையை மூடி மறைக்க முயற்சி நடப்பதாக மேற்குவங்க அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு. குற்றவாளியை தூக்கிலிட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக முதலமைச்சர் மம்தா திட்டவட்டம்.

  • தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள் . இதனால், சென்னை ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

  • மதுரை, திருச்சியில் வெளுத்து வாங்கிய கனமழை. தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் கணிப்பு.