இன்றைய காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்|புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை-வெண்கலம் வென்ற அமன் ஷெராவத்

PT WEB
  • எஸ்டி, எஸ்சி இடஒதுக்கீட்டில் "கிரீமிலேயர்" கிடையாது என உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையை நிராகரித்ததுள்ளது மோடி அமைச்சரவை.

  • பிரேசிலில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான பயணிகள் விமானம் கீழே விழுந்து தீப்பிடித்ததில் விமானத்தில் இருந்த 62 பேரும் உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது.

  • பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தம் 57 கிலோ எடைப் பிரிவில் புவேர்ட்டோ ரிக்கோ வீரர் க்ரூசை வீழ்த்தி வெண்கலம் வென்றார் அமன் ஷெராவத். இந்நிலையில் , இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலம் உறுதியாகியுள்ளது.

  • போட்டியில் பங்கேற்கும் முன் 10 மணி நேரத்தில் நான்கரை கிலோ எடையை குறைத்த அமன் ஷெராவத். இரவு முழுவதும் தூங்காமல் கடும் உடற்பயிற்சி மேற்கொண்டதாக தகவல்.

  • வெண்கலம் வென்ற அமன் ஷெராவத்துக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து. அமனின் சாதனையை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடுவதாக புகழாரம் சூட்டி தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

  • வினேஷ் போகட் வழக்கில் இன்று தீர்ப்பளிக்கிறது சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம். எடை அதிகரிப்புக்கு அடுத்தடுத்த போட்டிகள் உள்ளிட்டவை முக்கிய காரணம் என வாதம் முன்வைப்பு.

  • நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டுக்கு இன்று செல்கிறார் பிரதமர் மோடி. வான்வழியாக பார்வையிட்டு ஆய்வு செய்வதுடன் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • வயநாடு செல்லும் பிரதமர் மோடியின் முடிவு வரவேற்கத்தக்கது எனவும், தேசிய பேரிடராக அறிவிப்பார் என்றும் நம்புவதாக ராகுல்காந்தி எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

  • செங்கல்பட்டு, திருவண்ணாமலை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்றும் கனமழை பெய்தது. வேலூர், சேலத்தில் கனமழையால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.

  • புதுச்சேரியில் 4 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்த தண்ணீர். இந்நிலையில், பள்ளிளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு சென்னை வள்ளுவர்கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், உண்மையான குற்றவாளிகளை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என இயக்குநர் பா.ரஞ்சித் பேச்சு.

  • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ரவுடி நாகேந்திரனை கைது செய்தது சென்னை காவல்துறை.

  • 17 மாதங்களுக்கு பிறகு திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார் மணிஷ் சிசோடியா. அவருக்கு, குடும்பத்தினர், ஆம் ஆத்மி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.