இன்றைய காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

தலைப்புச் செய்திகள் | ஆன்மிக நிகழ்வில் 116 பேர் மரணம் முதல் கூட்டணி பற்றி பிரதமர் விமர்சனம் வரை!

PT WEB
  • உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 116 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

  • கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு பல்வேறு வரலாற்று சாதனைகளை நிகழ்த்தியுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்த நிலையில், கூட்டணி கட்சிகளை ஒட்டுண்ணி போல காங்கிரஸ் உறிஞ்சுவதாக விமர்சனம் செய்துள்ளார்.

  • பிரதமர் நரேந்திர மோடியின் உரை முழுவதும் அமளியில் ஈடுபட்டன எதிர்க்கட்சிகள். மேலும், மணிப்பூர் வன்முறை, நீட் முறைகேடு குறித்து முழக்கம் எழுப்பினர்.

மோடி
  • அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட தனது உரையின் பகுதிகளை மீண்டும் சேர்க்க வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

  • தமிழ்நாடு ஊரக தொழில் காப்பு மற்றும் புத்தொழில் உருவாக்கு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆண்டுதோறும் 100 மகளிர் தொழில்முனைவோர் அடையாளம் காணப்படுவர்கள் என அமைச்சர் உதயநிதி பேச்சு.

  • திமுக இரட்டை வேடமிடுவதாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு. மேலும் சட்டமன்றத்தில் கள்ளக்குறிச்சி விவகாரத்தை விவாதிக்காமல், நாடாளுமன்றத்தில் நீட் தேர்வை விவாதிக்க கோருவதாக விமர்சனம் செய்துள்ளார்.

  • விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வாக்கு யாருக்கு? திமுக - பாமக தலைவர்களிடையே கருத்து மோதல்.

  • திருச்செந்தூர் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு மாதத்தில் திருப்பி தந்துவிடுவதாக எழுதி வைத்துவிட்டு சென்ற திருடன்.

  • விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரர் ஆண்டி முரே விலகல். காயம் காரணமாக இரட்டையர் பிரிவில் மட்டுமே பங்கேற்பார் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  • விம்பிள்டன் தொடரில் இருந்து நடப்பு சாம்பியன் மார்கெட்டா வொன்ட்ரூசோவா வெளியேற்றம். முதல் சுற்றில் தோல்வி அடைந்துவெளியேறி மோசமான சாதனை படைத்த மார்கெட்டா.