இன்றைய காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

தலைப்புச் செய்திகள் | ராகுல் காந்தியின் மக்களவை பேச்சு முதல் IAS அதிகாரிகள் பணியிட மாற்றம் வரை!

PT WEB
  • அரசியல் சாசனத்தின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். மேலும் “வன்முறை, வெறுப்பு, பொய் புரட்டுகளை பரப்புபவர்கள் இந்துக்களாகவே இருக்க முடியாது” என்று நாடாளுமன்றத்தில் ஆவேமாக பேசியுள்ளார்.

  • ராகுல் காந்தியின் பேச்சு இந்துக்கள் மீதான தாக்குதல் என பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அரசியலமைப்பு சட்டம் எதை சொல்கிறதோ அதன்படி தாம் நடப்பதாக பதிலளித்துள்ளார்.

ராகுல் காந்தி - மோடி - மக்களவை - ஓம் பிர்லா
  • தடைச்செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டதாக தஞ்சையில் கைதான இருவரை நீதிமன்றக் காவலில் வைக்க தேசிய பாதுகாப்பு முகமை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.

  • நாடு முழுவதும் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் நடைமுறை சட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

  • தமிழ்நாட்டில் 15க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள சூழலில், வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ மருத்துவத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

SupriyaSahu TNGovt
  • ஒரு லட்சம் ரூபாய் செலுத்தினால் 4 லட்சம் ரூபாய் தருவதாக கூறி 87 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, திருவள்ளூரில் ஓய்வு பெற்ற ஆசிரியர் மீது காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  • உயிரிழந்த கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவியின் பெற்றோரிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மாணவியின் வீட்டிலும் சிறப்பு புலனாய்வு குழு சோதனை மேற்கொண்டுள்ளது.

  • விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இருந்து இந்திய வீரர் சுமித் நாகல் செர்பியா வீரருடன் 4 செட்கள் விளையாடி போராடி தோல்வியடைந்தார்.

  • விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இருந்து முன்னணி வீராங்கனை சபலென்கா விலகல். பயிற்சியின் போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக பங்கேறவில்லை என விளக்கம்.