இன்றைய காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

காலை தலைப்புச் செய்திகள் | புதிய மத்திய அமைச்சர்கள் லிஸ்ட் முதல் துணை அதிபர் சென்ற விமானம் மாயம் வரை

PT WEB
  • புதிதாக பதவியேற்ற மத்திய அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, அணுசக்தி, விண்வெளி, பணியாளர் நலத்துறைகளை தன்வசம் வைத்துக்கொண்டார் பிரதமர் மோடி.

  • ராஜ்நாத் சிங்கிற்கு பாதுகாப்புத்துறை, அமித்ஷாவுக்கு உள்துறை, நிர்மலா சீதாராமனுக்கு நிதித்துறை, ஜெய்சங்கருக்கு வெளியுறவுத்துறை அப்படியே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மன்சூக் மாண்டவியா வசமிருந்த சுகாதாரத்துறை ஜெ.பி.நட்டாவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  • நரேந்திர சிங் தோமரிடம் இருந்த வேளாண்துறை, சிவராஜ் சிங் சவுகானுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமிக்கு கனரக தொழில்துறையும், தெலுங்கு தேச எம்பி ராம்மோகன் நாயுடுவுக்கு விமான போக்குவரத்துத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • யார் யாருக்கு எந்தெந்த துறை என்ற முழு விவரத்தையும், கீழ்வரும் இணைப்பில் காணலாம்...

  • ராய் பரேலி பொதுக்கூட்டத்தில் இன்று பங்கேற்று வாக்காளர்களுக்கு நன்றி கூறுகிறார் ராகுல் காந்தி. மேலும், கேரளாவின் வயநாடு தொகுதிக்கு நாளை செல்ல திட்டம்.

ராகுல் காந்தி
  • நாடாளுமன்ற திமுக குழுத்தலைவராக கனிமொழி, மக்களவை குழு தலைவர் டிஆர் பாலு, மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • ஜூன் மாதத்திற்காக வரி பகிர்வு நிதியாக ஒரு லட்சத்து 39 ஆயிரம் கோடி ரூபாயை விடுவித்தது மத்திய நிதியமைச்சகம். இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு 5,700 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.

  • கர்நாடகாவை சேர்ந்த சோமன்னாவை மத்திய நீர்வளத்துறை இணையமைச்சராக நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, காவிரி நதிநீர் பிரச்னை இருப்பதை சுட்டிக்காட்டி தமிழகத்தில் கண்டனம் வலுத்து வருகிறது.

  • கிழக்கு ஆப்ரிக்க நாடான மலாவியில் துணை அதிபர் சென்ற விமானம் மாயமாகியுள்ளது. இந்நிலையில், ரேடாரில் இருந்து காணாமல் போன விமானத்தை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

  • இருபது ஓவர் உலகக்கோப்பை போட்டியில் போராடி வீழ்ந்தது வங்கதேசம். 4 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்ரிக்க அணி வெற்றியடைந்தது.