Rahul gandhi, Kamalhaasan PT
இந்தியா

Head Lines | நாளை மணிப்பூர் செல்கிறார் ராகுல் காந்தி To கள்ளச்சாராயம் குறித்து கமல்ஹாசன் கருத்து!

PT WEB
  • பெரம்பூரில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கு கொண்டுவரப்பட்டது ஆம்ஸ்ட்ராங்கின் உடல். இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் ஆகியோரவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

  • ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த இன்று சென்னை வருகிறார் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி. இதனால், பெரம்பூர் முழுவதும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பினை ஏற்படுத்தியுள்ளனர்.

  • ஆம்ஸ்ட்ராங்கின் உடலை, கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படுமா? என உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்புராயன் முன்பு இன்று காலை வழக்கு விசாரணை நடக்கவுள்ளது.

  • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 8 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்க எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி பரமசிவம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

  • ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக மேலும் மூன்று பேரை பிடித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஏற்கனவே கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள்தான் என வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் பேட்டியளித்துள்ளார்.

  • கடலூரில் பாமக பிரமுகர் சிவசங்கருக்கு அரிவாள் வெட்டு குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  • செங்கல்பட்டு அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டதில், காரில் பயணித்த தாய், மகள் உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது.

  • நாளை மணிப்பூர் செல்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. அங்கு சென்று நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

  • கள்ளச்சாராயம் வருவதற்கு மதுவிலக்குதான் காரணம் எனவும், மதுவிலக்கு செய்தால் கள்ளச்சாராயம் மிகும் எனவும் மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

  • ஜிம்பாம்வே அணியுடனான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை தவிழுவியது. உலகக்கோப்பை வெற்றியை தொடர்ந்து நடைபெற்ற முதல் போட்டியில் ஷாக் கொடுத்த இந்திய இளம்படை .