இந்தியா

ஆந்திர அரசுப் பேருந்தில் திருப்பதி தரிசன டிக்கெட்

jagadeesh

திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க ஆந்திர அரசுப் பேருந்தில் வரும் பக்தர்களுக்கு, அந்தப் பேருந்துகளிலேயே 300 ரூபாய் தரிசன டிக்கெட் பெறும் வசதி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநில அரசு போக்குவரத்துக் கழகத்தில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக இந்த திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தினந்தோறும் ஆயிரம் டிக்கெட்டுகள் பயணிகளுக்கு வழங்கப்படும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.