இந்தியா

“இன்று நள்ளிரவுக்குள் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நிலுவைத்தொகை” - நிர்மலா சீதாராமன்

webteam

நடப்பாண்டு ஜிஎஸ்டி நிலுவைத் தொகை இன்று நள்ளிரவுக்குள் மாநிலங்களுக்கு வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின்னர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “இன்று நள்ளிரவுக்குள் நடப்பாண்டு ஜிஎஸ்டி நிலுவைத்தொகை மாநிலங்களுக்கு வழங்கப்படும். நடப்பாண்டு நிலுவைத் தொகையான 20 ஆயிரம் கோடி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். மேலும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி தொகையான 24 ஆயிரம் கோடி அடுத்தவார இறுதிக்குள் வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.