இந்தியா

உயிரை காப்பாற்றிய ஹெல்மெட்டிற்கு கோயில் கட்டிய இளைஞர்!

webteam

ஆந்திராவில் தனது உயிரை காப்பாற்றிய தலை கவசத்திற்கு இளைஞர் ஒருவர் கோயில் கட்டிய சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆந்திர மாநிலம் சத்தியவேடு அடுத்த ராஜுல கண்டிகை பகுதியை சேர்ந்தவர் கோபி. இவர், கடந்த 7 ஆம் தேதி தன்னுடய இருசக்கர வாகனத்தில் செல்லும் போது விபத்தில் சிக்கினார். இருப்பினும் அவர் தலைக்கவசம் அணிந்திருந்ததால் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த நிகழ்வை மறவாத கோபி, தனது உயிரை காப்பாற்றிய தலை கவசத்திற்கு, டவர் கிளாஸ் என்னுமிடத்தில் கோயில் ஒன்றைக் கட்டியுள்ளார். 

இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதை இதன் மூலம் அவர் வலியுறுத்தியுள்ளார். கோபின் இத்தகைய செயலை பலரும் கேலி செய்தாலும், அவர் தலைகவசத்திற்காக கோயில் கட்டியுள்ளதை கோபியின் குடும்பம் முழு மனதுடன் ஆதரித்துள்ளது.