இந்தியா

தெலங்கானா: ரயில் தடத்தில் சிக்கிக் கொண்ட சிறுவன்... பத்திரமாக மீட்ட பாதுகாப்புப்படை வீரர்

kaleelrahman

தெலங்கானா ரயில் நிலைய ரயில்தடத்தில் தவறிவிழுந்த சிறுவனை ரயில்வே பாதுகாப்புப்படை வீரர் சாதுர்யமாக மீட்டார். ரயில்வே பாதுகாப்பு படை வீரருக்கு சமூக வலைதளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தெலங்கானா மாநிலம், பேகம்பேட்டை ரயில் நிலையத்தில் விரைவு ரயில் நின்றிருந்தது. அதில் முண்டியடித்து ஏறும்போது ஒரு தம்பதியின் சிறுவன் தவறி பிளாட்பாரத்திற்கும் ரயிலுக்கும் இடைவெளியில் சிக்கிக்கொண்டான். அப்போது ரயில்நிலைய பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படை வீரர் ரயில் புறப்படுவதற்கு முன்பே எந்த அசம்பாவிதமும் இன்றி அந்த சிறுவனை பத்திரமாக மீட்டார்.


இந்த காட்சி ரயில் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன. தற்போது அந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனைத்தொடர்ந்து அந்த பாதுகாப்பு படை வீரருக்கு சமூக வலைதளம் வாயிலாக பாராட்டுகளும் குவிந்து வருகின்றது.