இந்தியா

நேர்மையாக வரி செலுத்துவோருக்கு சலுகை - பிரதமர் மோடி

webteam

நேர்மையாக வரி செலுத்துவோருக்கு வரி விதிப்பில் சலுகை வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரப்படுத்தும் புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “நேர்மையாக வரி செலுத்துவோருக்கான புதிய திட்டம் செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும். நேர்மையாளர்களுக்கு வரி விதிப்பில் சலுகை வழங்கப்படும். வரிவிதிப்பில் செய்யப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

உரிய நேரத்தில் நேர்மையாக வரி செலுத்துவோர் நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள். வரி செலுத்துவோர் அனைத்து துறைகளிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். மத்திய அரசின் திட்டங்கள் மக்களை எளிதில் சென்று சேருகின்றன” எனத் தெரிவித்தார்.