tattoo artist found dead PT
இந்தியா

மகாராஷ்டிரா|காதலருடன் லின் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்த டாட்டூ பெண் கலைஞர் கொடூரக் கொலை! நடந்ததுஎன்ன?

ஜெனிட்டா ரோஸ்லின்

மகாராஷ்டிராவில் 26 வயதான tattoo பெண் கலைஞரான ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இறந்த இப்பெண்ணின் மரணத்திற்கு , இவரின் காதலர் தான் காரணம் என்ற சந்தேகத்தில் அந்நபரை தேடும் பணியில் டெல்லி போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லியை சேர்ந்த 26 வயதான கோயல் என்ற சாந்திக்ரியா அசாமில் உள்ள பட்டியலின குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் தனது தாயுடன் 6 வருடங்களாக வசித்து வருகிறார். பச்சை குத்துவதற்கு பெயர் பெற்ற இவர், இதன் மூலம் வருமானத்தை ஈட்டி வந்துள்ளார்.

இப்படியாக சென்று கொண்டிருந்த இவரின் வாழ்க்கையில், யவத்மால் மாவட்டத்தில் உள்ள சன்னி என்ற நபருடன் சமூக வலைதளத்தின் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. நாட்கள் செல்ல செல்ல நேரில் சந்தித்து பேசிக்கொண்ட இருவருக்குமான நட்பு காதலாக மலர்ந்துள்ளது.

வேலையில்லாமல் இருக்கும் சன்னி, சாந்திக்ரியாவை அவர் வசித்து வரும், அகோலாவுக்கு வரும்படியும், இருவரும் லிவ் இன் ரிலேஷன்ஷிப் வாழ்கையில் இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

இவர் கூறியதை கேட்ட, சாந்திக்ரியாவும், கடந்த ஜூலை 21 ஆம் தேதி மூர்த்திஜாவூருக்கு வந்தடைந்துள்ளார். இதன்பிறகு, பிரதிக் நகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில், இருவரும் ஒன்றாக லிவ் இன் உறவில் வாழ தொடங்கியுள்ளனர்.

இதன்பிறகு, சன்னி தான் வைட்டராக பணிப்புரிந்த இடத்திற்கு , சாந்திக்ரியாவையும் அழைத்து கொண்டு வேலை கேட்க சென்றுள்ளார். ஆனால், அந்த பாரின் உரிமையாளர் சாந்திக்ரியாவுக்கு வேலை கொடுக்க மறுத்துள்ளார்.

நாளடைவில் சன்னியின் குடிப்பழக்கத்தால், இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை இரவு இருவருக்கும் இடையே வாய் சண்டை எல்லையை மீறியுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், தனது காதலியிடம் போட்ட சண்டையா ஆத்திரத்தில் சன்னி சாந்திக்ரியாவை கூர்மையான ஆயுதத்தால் கடுமையாக தாக்கி கொன்றதாகவும், அன்றிரவே அங்கிருந்து இவர் தப்பித்து சென்றுவிட்டார் என்றும் முர்திசாபூர் காவல் நிலைய ஆய்வாளர் பௌராவ் குகே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சன்னியை கண்டுபிடிக்க போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். சன்னியின் வீட்டு உரிமையாளர் சம்பவ தினத்தன்று காலையில் இவர்களின் அறையை திறந்து பார்த்தபோது, உள்ளே சாந்திக்ரியா கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், கிடந்துள்ளார்.

இதன்பிறகு, போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இப்பெண்ணின் உடலை கைப்பற்றி, தற்போது அகோலா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.