இந்தியா

சபரிமலை கோவிலில் மேலும் ஒரு பெண் தரிசனம்

சபரிமலை கோவிலில் மேலும் ஒரு பெண் தரிசனம்

webteam

சபரிமலையில் இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்ததை தொடர்ந்து, மேலும் இலங்கையைச் சேர்ந்த ஒரு பெண் தரிசனம் செய்துள்ளார் என்பதற்கான வீடியேவை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

இலங்கையைச் சேர்ந்த 46 வயதான சசிகலா தன் கணவருடன் சென்று நேற்று இரவு 18 படி ஏறி சாமி தரிசனம் செய்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண்ணான சசிகலா பல நாட்கள் விரதமிருந்து இருமுடி கட்டி தன் கணவருடன் நேற்று பம்பா வந்துள்ளார். சபரிமலையில் பெரும் பிரச்னைகள் இருப்பதால் கேரள போலீஸாரிடம் தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார். 

அதன்படி, இருவரும் போலீஸ் அதிகாரிகளால் பாதுகாப்போடு சன்னிதானம் நோக்கி அழைத்துச் செல்லப்பட்டனர். ஐயப்பன் கோவிலின் நடை இரவு 11 மணிக்கு சாத்தப்படும், சசிகலாவும் அவரது கணவரும் நேற்று இரவு 10.45 மணிக்கு இருமுடியுடன் பதினெட்டாம்படி ஏறி சாமி தரிசனம் செய்தனர். இதனை கேரள போலீஸார் உறுதி செய்துள்ளனர்.

முன்னதாக தன்னை ஆண் பக்தர்கள் அனுமதிக்கவில்லை என இலங்கையைச் சேர்ந்த பெண் தெரிவித்திருந்தார். ஆனால், அவர் தரிசனம் செய்த வீடியோ பின்னர் வெளியானது. ஏற்கனவே இரு பெண்கள் சன்னிதானம் சென்று சாமி தரிசனம் செய்த நிலையில் தற்போது மேலும் ஒரு பெண் தரிசனத்தை மேற்கொண்டுள்ளார்.

மேலும் சபரிமலையில் நான் சாமி தரிசனம் செய்யவில்லை என்று சசிகலா தெரிவித்த நிலையில், அவர் முறைபடி சன்னிதானம் சென்று சாமி தரிசனம் செய்தற்கான வீடியேவை கேரள போலீஸ் தற்போது வெளியிட்டுள்ளது.