இந்தியா

நெருப்பு வளைய‌ சூரிய கிரகணம் தொடங்கியது

நெருப்பு வளைய‌ சூரிய கிரகணம் தொடங்கியது

webteam

30 ஆண்டுகளுக்கு பின் நிகழும் நெருப்பு வளைய‌ சூரிய கிரகணம் தெரிய தொடங்கியது.

தமிழகத்தில் ஊட்டி பகுதியில் பகுதி அளவில் தெரிய தொடங்கியது. இந்த சூரிய கிரகணம் காலை 11.19 மணி வரை தெரியும். சென்னையில் காலை 9.34மணிக்கு சூரிய கிரகணம் பகுதி அளவில் தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரிய கிரகணம் தமிழகத்தின் கோவை, ஈரோடு , திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 93% தெளிவாக தெரியும் என்றும் சென்னை, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பகுதி அளவிலான சூரிய கிரகணமே தெரியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சூரிய கிரகணத்தை வெறுங்கண்ணால் பார்க்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.