இந்தியா

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 65 கி.மீ ஓடிய எஸ்.ஐ: சாலையில் மயங்கியதால் பரபரப்பு

webteam

உத்தரப் பிரதேசத்தில் பணியிடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் 65 கிலோ மீட்டர் தூரம் ஓடினார். 

முதலில் பணியாற்றிய காவல் நிலையத்தில் இருந்து, புதிதாக பணியிடமாற்றம் செய்யப்பட்ட காவல் நிலையத்திற்கு ஓடியே சென்றார். உயரதிகாரிகள் சார்வாதிகார போக்கை சுட்டிக்காட்டும் வகையில், இவ்வாறு செயல்பட்டதாக விஜய் பிரதாப் என்ற அந்த காவல் உதவி ஆய்வாளர் கூறினார். 

நீண்டதூரம் ஓடியதால் களைப்படைந்த அவர் மயக்கம் அடைந்தார். இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.