இந்தியா

அரசு ஆரம்ப பள்ளியில் ஆபாச நடனம்

webteam

உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில், பார்களில் நடனமாடும் பெண்களின் நடன நிகழ்ச்சியை நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

பள்ளி முடிந்து மாணவர்கள் வீடு திரும்பிய நிலையில் இரவு நேரத்தில் உள்ளூர் ஆட்கள் சிலர் பள்ளியை பாராக மாற்றியுள்ளனர். பெண்களோடு அவர்களும் நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபடும் காட்சிகள் வெளியாகி உள்ளன. அரசு ஆரம்ப பள்ளியில் இந்த செயலை அரங்கேற்றியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்துள்ளன.