இந்தியா

பள்ளி வாகனம் மீது ரயில் மோதி 13 மாணவர்கள் உயிரிழப்பு

பள்ளி வாகனம் மீது ரயில் மோதி 13 மாணவர்கள் உயிரிழப்பு

Rasus

உத்தரப்பிரதேசத்தில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதி 13 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் ஆளில்லா ரயில்வே கிராசிங்கை பள்ளி வாகனம் ஒன்று கடந்தபோது, திடீரென வந்த ரயில் பள்ளி வாகனத்தின் மீது கடுமையாக மோதியது. இதில் பள்ளி வாகனத்தில் பயணம் செய்த 13 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.