சுப்ரதோ ராய் file image
இந்தியா

சகாரா குழுமத்தலைவர் சுப்ரதோ ராய் காலமானார்

PT WEB

சகாரா இந்தியா குழுமத்தின் தலைவரான சுப்ரதோராய் மாரடைப்பால் நேற்று இரவு காலமானார். இவருக்கு வயது 75. உயர் ரத்த அழுத்தம், சக்கரை நோய் இவற்றால் அவதிபட்டு வந்த இவர் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி ஆராய்ச்சி மருத்துவமனையில் நவம்பர் 12ம் தேதி அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மாரடைப்பு காரணமாக நேற்று இரவு அவர் காலமானதாக சகாரா குழுமம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.