நிதிஷ்குமார் கோப்புப் படம்
இந்தியா

பீகார்: 65% இடஒதுக்கீட்டு மசோதா ஒருமனதாக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

Prakash J

பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடரில், சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வின் முழு விவரங்களை வெளியிட்டுப் பேசிய முதல்வர் நிதீஷ்குமார், ’இடஒதுக்கீட்டு வரம்பை 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்தப்படும்’ எனத் தெரிவித்தார்.

மேலும், தாழ்த்தப்பட்டோருக்கு 20%, பழங்குடியினருக்கு 2%, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் , பிற்படுத்தப்பட்டோருக்கு 43% ஆக உயர்த்த பரிந்துரை செய்தார்.

அப்போது அவர், ”பட்டியலினத்தவரின் இடஒதுக்கீடு 13% இருந்து 20% ஆகவும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு 30% இருந்து 43% ஆகவும், பழங்குடியினர் இடஒதுக்கீடு முன்பிருந்த 2% அப்படியே நீடிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டது. நிதீஷ்குமார் பரிந்துரைத்தப்படி, இது நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டால், பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான மத்திய அரசின் 10 சதவிகித இடஒதுக்கீட்டையும் சேர்த்து, பீகாரில் இடஒதுக்கீடு 75% எனக் கருத்துக்கள் கூறப்பட்டன.

பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார்

இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் இன்று மொத்த இடஒதுக்கீட்டு அளவை 65% ஆக உயர்த்த சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதா, சட்டப்பேரவையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: #7YearsOfDemonetisation | பாஜக-வை சாடி எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் விமர்சனம்!