இந்தியா

வெள்ளத்தில் இருந்து தப்பிக்க மின்கம்பத்தில் தஞ்சமடைந்தவர் மீட்பு

webteam

குஜராத்தில் வெள்ளத்தில் இருந்து தப்பித்து மின்கம்பத்தின் உச்சியில் தஞ்சமடைந்த ஒருவர் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளார். குஜராத்தில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. டனேரா, டீசா, பானஸ்கந்தா மற்றும் தாராட் ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் கடுமையாகச் சேதடைந்துள்ளன. பானஸ்கந்தா பகுதியில் வெள்ளத்தில் இருந்து தப்பிப்பதற்காக ஒருவர் மின்கம்பத்தின் உச்சியில் ஏறியுள்ளார். கீழே இறங்கவும் முடியாமல் கம்பத்தில் தவித்த அவரை மீட்புப் படையினர் ஹெலிகாப்டரில் இருந்து காப்பாற்றியுள்ளனர்.