the chatpata affair கூகுள்
இந்தியா

அன்று ரூ5000 சம்பளத்தில் வேலை; இன்று 50உணவகங்கள் மூலம் வருடம் 8 கோடி வருமானம்! யார் இந்த ஷிஜூ பாபன்?

Jayashree A

5000 சம்பளம் வாங்கிய ஹோட்டல் ஊழியர், இன்று 8 கோடி மாத வருமானம் ஈட்டும் 50 துரித உணவுகடைகளின் சொந்தக்காரர் ஆக மாறியிருக்கிறார்.

சென்னை நங்கநல்லூர் பகுதி பிரதான சாலையில் ’the chatpata affair’ என்ற ஒரு துரித உணவுக்கடை இருக்கிறது. அங்கு காலை முதல் இரவு வரை சாட், பல்லே சாட், பாப்ரி சாட், பாதாம் பால், ரோல்ஸ், சாண்ட்விச்கள், ஷேக்ஸ் என்று ஃபியூஷன் உணவுகள் உட்பட கிட்டத்தட்ட 200 ஐட்டங்கள் உள்ளன. இதன் உரிமையாளார் யார்? அவர் என்ன சாதித்து இருக்கிறார் என்பதே இங்கே நாம் பார்க்கவிருக்கிறோம்.

சத்பட்டாவின் நிறுவுனர் ஷிஜூ பாபன். இவர் ராஜஸ்தானில் உள்ள சிறிய நகரத்தைச் சேர்ந்தவர். இவரின் இளமை பருவத்தில் தாய் தந்தையரை இழந்ததால், இவர் ஆரம்ப காலம் முதலே உழைத்து வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்துள்ளார்.

1997ல் டெல்லிக்கு சென்று அங்கு ஒரு பீஸ்ஸா ஹட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அங்கு உணவகத்தை சுத்தம் செய்வது முதல் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வது மற்றும் பாத்திரங்களைச் சுத்தம் செய்வது வரை அனைத்தையும் செய்து கொஞ்சம் கொஞ்சமாக தொழிலையும் கற்று வந்துள்ளார். அப்பொழுது அவரின் மாத வருமானம் வெறும் ரூ.5000 லிருந்து 6000 வரைதான். இதில் அவர் தங்கியிருக்கும் இடத்திற்கு வாடகை மின்சாரம் என்று அவரின் சம்பளம் அவருக்கு சரியாக இருந்துள்ளது.

அதன் பிறகு தனது 20 வருட அனுபவத்தில் south fried chicken என்ற நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வந்தார். இதில் பல நாடுகளின் செயல்பாடுகள் என்ன என்பதையும் அவர் கற்று தேர்ந்துள்ளார்.

அதன் பிறகு தானே ஒரு நிறுவனத்தை தொடங்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். ஆனால் இது அவருக்கு பெரும் சவாலாக இருந்துள்ளது. இருப்பினும் தன் முயற்சியை கைவிடவில்லை. மேற்கத்திய துரித உணவுகளுடன் ஒப்பிடுகையில் இந்திய துரித உணவுகள் குறைவான பிரபலத்தை அவர் கவனித்தார்.  அதை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கினார். சத்பட்டாவை தொடங்கினார்.  இந்தியர்கள் சமோசா மற்றும் சாட்கள், பர்கர்கள் மற்றும் பீட்சாக்கள் போன்றவற்றை பெரிதும் விரும்பி சாப்பிடுவதை உணர்ந்தவர், சத்பட்டாவில் அதை தயாரிப்பதில் அதிக கவனம் கொண்டார்.

கோவிட் 19 ல் தொற்றுநோய்களின் போது ஒரு முயற்சியைத் தொடங்குவது என்பது சவாலான ஒன்று அந்த சமயத்தில்தான் தனது சத்பட்டாவைத் தொடங்கினார். தனது துரித உணவிற்கு மொபைல் கார்ட் மாடலைத் தேர்வு செய்தார்.  சத்பட்டாவின் சுவை அலாதியானதாக இருக்கவே மக்கள் இவரின் கடையை நோக்கி படை எடுக்க ஆரம்பித்தனர்.

வெறும் ரூ.5 லட்ச முதலீட்டில் ஆரம்பித்த துரித உணவு கடையான சத்பட்டா மொபைல் கார்ட் இன்று நாடு முழுவதும் 50 இடங்களில் முன்னிலை வகித்து துரித உணவகமாக செயல்பட்டு வருகிறது. அதன்படி பெங்களூரு, சென்னை, குர்கான், மற்றும் ஹைதராபாத் என்று இவரின்  கடை பல இடங்களில் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது. தற்பொழுது இவரின் மாத வருவாயானது 8 கோடியாக உயர்ந்துள்ளது.

மேலும், இந்தியவைத்தாண்டி உலகநாடுகளான கிழக்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும் சத்பட்டாவை திறக்கவேண்டும் என்பது இவரின் எண்ணம்.  மேலும் 2027ல் 1000 கோடியை தொடவேண்டும் என்பது இவரின் இலக்காக இருக்கிறது.

ஷிஜூ ஒரு ஊழியராக இருந்து இன்று மில்லியன் டாலர் வணிகத்தை நடத்துவதற்கு அவர் நீண்ட உழைப்பை அற்பணித்துள்ளார் என்றால் அது மிகையாகாது.