இந்தியா

தொடரும் தாக்குதல்கள்: மோடி மவுனம் ஏன்?

webteam

அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இந்தியர்கள் மீது இனவெறித் தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில், இது குறித்து பிரதமர் மோடி அமைதி காப்பது ஏன் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

அமெரிக்கா மீது மோடிக்கு உள்ள அச்சத்தையே இது காட்டுவதாவும் அவர் தெரிவித்தார். 56 அங்குல மார்பு கொண்டவர் என பெருமிதமாகப் பேசப்பட்டவர், இப்படி நடந்து கொள்வது சரியா என்றும் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.