இந்தியா

சிஏஏ தொடர்பாக மக்கள் யோசனை தெரிவிக்கலாம்: உள்துறை அமைச்சகம்

சிஏஏ தொடர்பாக மக்கள் யோசனை தெரிவிக்கலாம்: உள்துறை அமைச்சகம்

webteam

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடவும், நீதிமன்றம் செல்லவும் மக்களுக்கு உரிமை உண்டு என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து மக்கள் தங்களின் யோசனைகளை தெரிவிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் சட்டத் திருத்தத்தை எதிர்த்து போராடவும், நீதிமன்றத்தை நாடவும் மக்களுக்கு உரிமை உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.