இந்தியா

அரசியல் கொலைகளுக்கு ஜனநாயகத்தில் இடமில்லை: பிரகாஷ் ஜவடேகர்

webteam

அரசியல் கொலைகளுக்கு ஜனநாயகத்தில் இடமில்லை என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதைத் தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் பாஜகவினர் கொலை செய்யப்பட்டது அரசியல் கொலைகள் என கடுமையான சாடினார். ’’19 பாஜகவினர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இது மனிதத் தன்மையற்ற செயல். இந்தக் கொடூரமான அரசியல் கொலை மற்றும் கொலைக் கலாச்சாரத்தை நாங்கள் கண்டிக்கிறோம். மேற்குவங்க மக்கள் இதற்கு சரியான பாடம் புகட்டுவார்கள்” என்றார்.

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பாஜக பிரமுகர் துலால் குமார் கடந்த வெள்ளிக்கிழமை காணாமல் போனார். அவர் சனிக்கிழமையன்று சடலமாக மீட்கப்பட்டார். இதே போல் கடந்த மே 30ஆம் தேதி பாஜக பிரமுகர் மஹாடோ என்பவர் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.இந்நிலையில் பிரகாஷ் ஜவடேகர் இவ்வாறு பேசியுள்ளார்.