இந்தியா

'மான் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்

webteam

மான் கி பாத் எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி இன்று உரையாற்றவுள்ளார்.

மான் கி பாத் எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையன்றும் உரையாற்றி வருகிறார். அதன்படி, இந்த ஆண்டின் முதல் உரையை இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி, உரையாற்றவுள்ளார்.

‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் நாட்டில் நிலவும் பிரச்சினைகள், அரசின் முடிவுகள், மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் என பல்வேறு அம்சங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.